செய்திகள்

மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Published On 2019-06-24 08:27 GMT   |   Update On 2019-06-24 08:27 GMT
மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:

மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் கடந்த ஜூன் 21-ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 17-ம் தேதியே முடிவடைந்து விட்டதால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News