செய்திகள்

‘டிக் டாக்’ வீடியோ வெளியிட சாகசம் செய்த பாடகர் பலி

Published On 2019-06-24 05:37 GMT   |   Update On 2019-06-24 05:37 GMT
துமகூரு அருகே டிக் டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெழும்பு முறிந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் சிக்க நாயக்கனஹள்ளி தாலுகா கோடேகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 26). இசை கச்சேரிகளில் பாடிவந்த பாடகரான இவர் டிக்-டாக் செயலி பயன்படுத்தி வந்தார். அதில் அவர் நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தும் வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சாகசம் செய்வது போன்ற வீடியோவை டிக்-டாக் செயலியில் பதிவிட முடிவு செய்தார். இதற்காக அவர் சிறிது தொலைவில் இருந்து ஓடி வந்து தனது நண்பரின் உதவியுடன் தரையில் கை, கால்கள் படாமல் தலைகீழாக பின்நோக்கி பல்டி அடிக்க முயன்றார். அப்போது எதிர் பாராதவிதமாக தவறி விழுந்த குமாரின் முதுகெலும்பு முறிந்தது.



இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் இறந்தார்.

டிக்டாக் வீடியோவுக்காக கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள முதல் உயிர் இழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News