செய்திகள்

டெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு

Published On 2019-06-24 00:56 GMT   |   Update On 2019-06-24 00:56 GMT
டெல்லியில் அடையாளம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பெண் நிருபர் மிதாலி சண்டோலா காயம் அடைந்தார்.
புதுடெல்லி:

டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம் அவரது காரை முந்திச்சென்று நின்றது.

அந்த வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டைகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கியால் மிதாலியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் விரைந்துவந்தனர். குண்டு காயம் அடைந்திருந்த மிதாலியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News