செய்திகள்

பா.ஜ.க. தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 85 வயது முதியவர் கைது

Published On 2019-06-23 14:58 GMT   |   Update On 2019-06-23 15:11 GMT
டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 85 வயது முதியவரை போலீசார் இன்று மைசூரில் கைது செய்தனர்.
புதுடெல்லி: 

டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை நடத்தினர். இதையடுத்து அது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், மைசூரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதையடுத்து மைசூரு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சுகந்த ராஜு  என்பவரை இன்று கைது செய்தனர். 85 வயதான அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News