செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சி துணை தலைவராக மாயாவதியின் சகோதரர் நியமனம்
பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணை தலைவராக மாயாவதியின் சகோதரரும் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவரது மருமகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் இன்று நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.
பின்னர், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணை தலைவராக மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளராக அவரது மருமகன் ஆகாஷ் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் குழு தலைவராக டனிஷ் அலி, கொறடாவாக கிரிஷ் சந்திரா ஆகியோரையும் நியமித்து மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.