செய்திகள்
துணிக்கடைகளில் உள்ள ஆபாச பொம்மைகளை அகற்றும் போராட்டம்- சிவசேனா மகளிர் அணி பங்கேற்பு
மும்பையில் துணிக்கடைகள் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றும் போராட்டத்தில் சிவசேனா மகளிர் அணி பங்கேற்றனர்.
மும்பை:
மும்பையில் துணிக்கடைகள் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றுமாறு சிவசேனாவின் பிரிஹன் மும்பை அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சில கடைகளில் ஆபாச பொம்மைகள் அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில், மும்பையின் விலே பார்லே பகுதியில் உள்ள துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை சிவசேனா மகளிர் அணியினர் அகற்றினர். இதேபோல், அடுத்தடுத்து பிறபகுதியில் உள்ள ஆபாச பொம்மைகளையும் அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.