செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை

Published On 2019-06-22 05:01 GMT   |   Update On 2019-06-22 05:01 GMT
ஜம்மு-காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியார் பகுதியில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
பரமுல்லா: 

ஜம்மு-காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள போனியார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். 

இதனை அறிந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News