செய்திகள்

பிரதமர் மோடி ஜப்பானில் சுற்றுப்பயணம்

Published On 2019-06-22 03:39 GMT   |   Update On 2019-06-22 03:39 GMT
ஜப்பானின் உசாகா நகரில் வருகிற 27 முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ள ஜி-20 அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.
புதுடெல்லி :

இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சீனா, கனடா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள ஜி-20 அமைப்பின் மாநாடு ஜப்பானின் உசாகா நகரில் வருகிற 27 முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.

இந்த மாநாட்டின் போது பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் மாநாட்டையொட்டி நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். பிரதமர் மோடி 6-வது முறையாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

Similar News