செய்திகள்
மகாராஷ்டிராவில் மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு
மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிராவில் மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கான மசோதாவிற்கு அம்மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.