செய்திகள்
ஜனாதிபதி உரை மிக சாதாரணமாக உள்ளது - காங்கிரஸ் கருத்து
ஜனாதிபதி உரை, கவரும் வகையில் இல்லை. முழுவதும் மிகச்சாதாரணமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சுரேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள் பற்றி ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்படவில்லை. வேலைவாய்ப்பு பிரச்சினை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருப்பது பற்றியோ, முதலீட்டு பற்றாக்குறை பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சுரேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஜனாதிபதி உரை, கவரும் வகையில் இல்லை. முழுவதும் மிகச்சாதாரணமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதையே ஜனாதிபதி மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள் பற்றி ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்படவில்லை. வேலைவாய்ப்பு பிரச்சினை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருப்பது பற்றியோ, முதலீட்டு பற்றாக்குறை பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.