செய்திகள்

சத்தீஸ்கரில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதல்- 5 பேர் பலி

Published On 2019-06-20 03:34 GMT   |   Update On 2019-06-20 03:34 GMT
சத்தீஸ்கரில் இரண்டு வேன்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்புர் மாவட்டம் நெல்சனார் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 2 பிக்-அப் வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. 

ஆட்களை ஏற்றி வந்தபோது நடந்த இந்த விபத்தில், அந்த வாகனங்களில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News