செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு - வெடிகுண்டு தயாரித்த 5 பேர் கைது
காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது மேலும் வெடிகுண்டு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் சைன்போரா என்ற இடத்தில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை சிலர் தயாரித்துக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர், சக்திவாய்ந்த வெடிபொருளை தயாரித்துக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் உத்தரவுப்படி, வெடிபொருளை தயாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தயாரித்த அதிநவீன வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் சைன்போரா என்ற இடத்தில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை சிலர் தயாரித்துக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர், சக்திவாய்ந்த வெடிபொருளை தயாரித்துக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் உத்தரவுப்படி, வெடிபொருளை தயாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தயாரித்த அதிநவீன வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது.