செய்திகள்

கா‌‌ஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு - வெடிகுண்டு தயாரித்த 5 பேர் கைது

Published On 2019-06-20 01:13 GMT   |   Update On 2019-06-20 01:13 GMT
கா‌‌ஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது மேலும் வெடிகுண்டு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:

கா‌‌ஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் சைன்போரா என்ற இடத்தில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை சிலர் தயாரித்துக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர், சக்திவாய்ந்த வெடிபொருளை தயாரித்துக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் உத்தரவுப்படி, வெடிபொருளை தயாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் தயாரித்த அதிநவீன வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது.
Tags:    

Similar News