செய்திகள்

சத்தீஸ்கரில் சமாஜ்வாடி கட்சி பிரமுகரை கடத்தி கொடூரமாக கொன்ற மாவோயிஸ்டுகள்

Published On 2019-06-19 09:38 GMT   |   Update On 2019-06-19 09:38 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் ஒருவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.
பிஜப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் பூனம். சமாஜ்வாடி கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். அரசு ஒப்பந்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சாலை போடும் பணியை பார்வையிடுவதற்காக மரிமல்லா கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.



அவரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று காலை மரிமல்லா மலைப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை மாவோயிஸ்டுகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது உடலைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிலர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது பிஜப்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் சந்தோஷ் பூனம் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News