செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்

Published On 2019-06-16 07:11 GMT   |   Update On 2019-06-16 08:03 GMT
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை 2வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.

இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 38-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சனைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.



இந்நிலையில், டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது.  இதில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், மேலவை பா.ஜ.க. தலைவர் தவார் சந்த் கெலாட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

17-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையை எப்படி சுமூகமுடன் கொண்டு செல்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News