செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் டெல்லியில் முதல் முறையாக இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் டெல்லி சென்றுள்ளனர். இந்தக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.