செய்திகள்

ஆந்திர சட்டசபை சபாநாயகராக சீதாராமன் தேர்வு

Published On 2019-06-13 07:14 GMT   |   Update On 2019-06-13 07:14 GMT
ஆந்திர சட்டசபை இன்று கூடியதும் சபாநாயகராக தம்னேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆமுதாலே வலசா தொகுதியில் இருந்து 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நகரி:

ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

நேற்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று சட்டசபை கூடியதும் சபாநாயகராக தம்னேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆமுதாலே வலசா தொகுதியில் இருந்து 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 3 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
Tags:    

Similar News