செய்திகள்

சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கடினம்: ரகுராம் ராஜன்

Published On 2016-05-22 17:23 IST   |   Update On 2016-05-22 17:23:00 IST
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்தியாவில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கடினம் என்று தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். ”உலக பொருளாதாரத்தில் இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் ”பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்தவம், வங்கிகளின் நிலைமை சீர் செய்வதும் அவசியமாகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பற்றாக்குறையால் ஏற்பட்ட வறட்சி, சர்வதேச சந்தையில் மந்தநிலை ஆகியவற்றுக்கு இடையிலும் இந்தியா 7 1/2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை செய்தால் வளர்ச்சி வேகம் பெறும், ஆனால் அதில் அரசியல் ரீதியாக சிரமம் உள்ளது.” என்று தெரிவித்தார்.

Similar News