செய்திகள்
சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கடினம்: ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்தியாவில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் ரீதியாக கடினம் என்று தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். ”உலக பொருளாதாரத்தில் இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் ”பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்தவம், வங்கிகளின் நிலைமை சீர் செய்வதும் அவசியமாகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பற்றாக்குறையால் ஏற்பட்ட வறட்சி, சர்வதேச சந்தையில் மந்தநிலை ஆகியவற்றுக்கு இடையிலும் இந்தியா 7 1/2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை செய்தால் வளர்ச்சி வேகம் பெறும், ஆனால் அதில் அரசியல் ரீதியாக சிரமம் உள்ளது.” என்று தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார். ”உலக பொருளாதாரத்தில் இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் ”பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்தவம், வங்கிகளின் நிலைமை சீர் செய்வதும் அவசியமாகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பற்றாக்குறையால் ஏற்பட்ட வறட்சி, சர்வதேச சந்தையில் மந்தநிலை ஆகியவற்றுக்கு இடையிலும் இந்தியா 7 1/2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை செய்தால் வளர்ச்சி வேகம் பெறும், ஆனால் அதில் அரசியல் ரீதியாக சிரமம் உள்ளது.” என்று தெரிவித்தார்.