செய்திகள்

தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை

Published On 2019-06-23 10:36 GMT   |   Update On 2019-06-23 10:36 GMT
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் நான்கிலும் தோற்றது.

இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தே.மு.தி.க, நாளை ஆலோசனை நடத்துகிறது.

அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

கூட்டத்துக்கு வரும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் பட்டியலை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News