உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளத்தில் போதையில் அரிவாளுடன் மக்களை மிரட்டி வரும் வாலிபர் சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ

Published On 2022-10-07 05:07 GMT   |   Update On 2022-10-07 05:07 GMT
  • வாலிபர் கையில் அரிவாளுடன் மக்களை மிரட்டும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.
  • பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியகுளம்:

பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகரை சேர்ந்த கணேசன் மகன் கண்ணதாசன்(22). இவர் ெதாடர்ந்து இப்பகுதியில் கஞ்சா போதையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், சாலையில் நடந்து செல்பவர்களை மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது கையில் அரிவாளுடன் மக்களை மிரட்டும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். இதனால் வியாபாரிகள் மற்றும் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர். இவர் பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தான் பெரிய ரவுடி என்றும், தன்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் அவர் கூறி வருவதால் அருகில் செல்லவும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே போதை ஆசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News