உள்ளூர் செய்திகள்

புளியந்தோப்பு தொழிலாளி கொலையில் தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது

Published On 2022-06-29 09:11 GMT   |   Update On 2022-06-29 09:11 GMT
  • கிருஷ்ணன் என்ற சின்னா மற்றும் அவரது மகன் முரளி, சதீஷ், முகேஷ் ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
  • புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெரம்பூர்:

புளியந்தோப்பு 5-வது தெருவை சேர்ந்தவர் ஆதி என்கிற சுரேஷ் (வயது 44). தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற சின்னா மற்றும் அவரது மகன் முரளி, சதீஷ், முகேஷ் ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கிருஷ்ணன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 2001-ம் ஆண்டு கிருஷ்ணனின் கையை சுரேஷ் வெட்டி உள்ளார். இதுபற்றி சுரேஷ் அடிக்கடி கூறி வந்தார்.

இதில் ஏற்பட்ட தகராறில் 21 ஆண்டுக்கு பிறகு சுரேசை வெட்டி பழி தீர்த்து உள்ளனர். கைதானவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News