உள்ளூர் செய்திகள்

நெல்லையில் தொழிலாளி மாயம்

Published On 2022-06-28 09:12 GMT   |   Update On 2022-06-28 09:12 GMT
  • நேற்று முன்தினம் கடைக்கு சென்ற மாயாண்டி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை தேடி வருகின்றனர்.

நெல்லை:

தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 60). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் கடைக்கு சென்ற மாயாண்டி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News