உள்ளூர் செய்திகள்

நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

Published On 2022-06-25 10:08 GMT   |   Update On 2022-06-25 10:08 GMT
  • ஆனால் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை 4 அல்லது 5 நாட்கள் காத்திருக்க வைத்து தான் கொள்முதல் செய்கின்றனர்.
  • தற்போது அடிக்கடி இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் காய்ந்த நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.

அம்மாப்பேட்டை:

சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பம்பு செட் உதவியுடன் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது அறுவடைசெய்யும் பணியில் மும்ரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை செய்யக்கூடிய நெல்லை அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நன்கு உலர வைத்து பின்னர் உலர்ந்த நெல்லை சாலியமங்கலம் அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை 4 அல்லது 5 நாட்கள் காத்திருக்க வைத்து தான் கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது அடிக்கடி இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் காய்ந்த நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே நெல்லை தாமதம் இன்றி உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News