உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Published On 2023-04-09 13:22 IST   |   Update On 2023-04-09 13:22:00 IST
  • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பக்கிரிபாளையம் புறவழிச் சாலைஅருகில் உள்ள தூங்கு மூஞ்சி மரத்தில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தூக்கில் பிணமாக தூங்கியவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? இவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News