உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற பெண் கைது

Published On 2022-08-16 08:05 GMT   |   Update On 2022-08-16 08:05 GMT
  • கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்
  • அதிரடி சோதனை மேற்கொண்டனர்

திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகம் ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் பின்புறம் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்று, அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த அருண்குமார் மனைவி அம்பிகா (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News