உள்ளூர் செய்திகள்

காட்டெருமை முட்டி விவசாயி பலி

Published On 2023-02-01 10:13 GMT   |   Update On 2023-02-01 10:13 GMT
  • துவரங்குறிச்சி அருகே இன்று காலை பரிதாபம்
  • நடுரோட்டில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், துவ–ரங்குறிச்சியை அடுத்த தெத் தூர் மலையாண்டி கோவில் பட்டியை சேர்ந்தவர் சிவ–ஞானம் (வயது 46). விவ–சாயியான இவர் இன்று காலை புதுக்கோட்டை நீதி–மன்றத்தில் வழக்கு ஒன்றிற்கு சாட்சி சொல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது ஊரில் இருந்து புதுக் கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.தெத்தூர் மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்று கொண்டிருந்த போது, 7 காட்டெருமைகள் சாலை–யில் கூட்டமாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிவஞானம் தன் னடைய மோட்டார் சைக் கிளை நிறுத்த முயற்சித்தார்.இதற்கிடையே கூட்டத்தில் இருந்த ஒரு காட்டெருமை திடீரென்று பாய்ந்து வந்த சிவஞானத்தின் மார்பு பகுதியில் குத்தி சாய்த்தது. இதில் நிலைகுலைந்த அவர் அருகே உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிளுடன் ேமாதி–னார். இதில் நெஞ்சு சிதைந்து சிவஞானம் ரத்த வெள் ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந் தார்.அந்த வழியாக வந்தவர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியா ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த–வர்கள் அவரை மீட்டு துவ–ரங்குறிச்சி அரசு மருத்து–வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத் துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் உயிரி–ழந்தது தெரியவந்தது.

Tags:    

Similar News