உள்ளூர் செய்திகள்
மன உளைச்சலில் என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை
- என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுக்கொண்டார்
திருச்சி:
திருச்சி கல்லுக்குழி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மனோ சந்தர் (வயது 29). டிப்ளமோ என்ஜினியரிங் முடித்த இவர், திருச்சியில் உள்ள ஒரு கால்செண்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் மன உளைச்சலில் தனியாக இருந்த மனோசந்தர், யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குச் சென்று மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த மனோ சந்தரின் மனைவி சசிகலா கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.