உள்ளூர் செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-16 07:14 GMT   |   Update On 2022-08-16 07:14 GMT
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஈடுபட்டனர்

திருச்சி:

தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ராயல் ராஜா தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.உயர்ஜாதி இந்துக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்

என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் பாரத், இளம்பனூர் முரளி, அமைப்பாளர் ராவணன் ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர் ரஞ்சித், பொருளாளர் பொன்னுசாமி, சரவணன், முருகதாஸ், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு தலைவர் சம்சுதீன் மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News