உள்ளூர் செய்திகள்

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-16 07:21 GMT   |   Update On 2022-08-16 07:21 GMT
  • போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
  • கலெக்டர், மேயர், கமிஷனர் தொடங்கி வைத்தனர்

திருச்சி:

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சி எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.

இந்த பேரணியினை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகள் பொருத்திய இந்த மோட்டார் சைக்கிள் பேரணியானது அய்யப்பன் கோவில் வழியாக செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி, மத்திய பேருந்து நிலையம், காமராஜர் சிலை ராக்கின்ஸ் சாலை, ெரயில்வே சந்திப்பு ரவுண்டானா, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது.

காவலர்களின் பாண்டு வாத்திய இசையுடனும் நான்கு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வுப் பதாகைகள் பொருத்திய நான்கு சக்கர வாகனங்களும் இந்த அணிவகுப்பில் பஙகேற்றன. இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் அன்பு, சுரேஷ்குமார், உதவி ஆணையர்கள் அஜய்தங்கம், செந்தில்குமார், ராஜூ, பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் கோ.தவச்செல்வம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் இன்று திருச்சி கோர்ட்டு சாலை எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா அருகில் இருந்து காவல் துறையின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கும் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News