முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- கலந்து கொண்ட அனைவருக்கும் பல முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்
திருச்சி:
மதுரை தனியார் மருந்தியல் கல்லூரி மருந்தாளுநர் படித்த முன்னாள் மாணவர்களின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். கும்பகோணம் ராமகிருஷ்ணன், நசுருதீன், திருச்சி ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்காட்டுப்பள்ளி திலகவதி வரவேற்றார். விழாவில் கிறிஸ்துதாஸ், விராலிமலை அய்யப்பன், புதுக்கோட்டை நாகராஜ் நிறைமதி, திருமயம் அப்துல்லா, நகரப்பட்டி கண்ணன், கீரமங்கலம் ராமசாமி, பட்டுக்கோட்டை ராமச்சந்திரன், மதுரை பாலமுருகன், ரீட்டா, கும்பகோணம் கவிதா, தென்காசி ஜெயராம், பேராஊறனி மணிகண்டன், சென்னை பாஸ்கர் மற்றும் ராஜேஷ், ஜோசப், சுந்தர் உட்பட ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் உரையாற்றிய அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இசை நாற்காலி, பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் பல முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். முடிவில் திருக்கோவிலூர் விவேக் நன்றி கூறினார்.