உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஒட்டன்சத்திரத்தில் புகையிலை, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

Published On 2022-07-02 05:30 GMT   |   Update On 2022-07-02 05:30 GMT
  • ஒட்டன்சத்திரம் நுகர்வோர் உரிமை மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் உலக போதைபொருள் விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது.
  • போதைபொருள் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமை குறித்தும், இளையதலைமுறை பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நுகர்வோர் உரிமை மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் உலக போதைபொருள் விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது.

ஜூனைத்பேகம் இதற்கு தலைமை தாங்கினார். சமூகசெயல்பாட்டாளர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் முகமதுநாசர், வக்கீல் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு போதைபொருள் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமை குறித்தும், இளையதலைமுறை பாது காப்பாக இருக்கவேண்டும் என்றும் பேசினர். மகளிர்சுயஉதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

Tags:    

Similar News