உள்ளூர் செய்திகள்
அதிக பாரத்தால் ஏற முடியாமல் பழுதடைந்து நின்ற லாரி
- புதிதாக போடப்பட்ட சாலை சற்று உயரமாக உள்ளதால் பல வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றன.
- புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்ணகி நகர் சாலையில் புதிதாக போடப்பட்ட சாலை சற்று உயரமாக உள்ளதால் பல வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றன.இந்த நிலையில் அதிக மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று கண்ணகி நகர் சாலையில் ஏறும் போது அதிக பாரத்தால் ஏற முடியாமல் பழுதடைந்து நின்றது. இதனால் புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.