உள்ளூர் செய்திகள்
- மாவட்ட கலெக்டர் வினீத், ஊராட்சி தலைவர் சரவணனிடம் ரூ.7½ லட்சம் மற்றும் பரிசுக்கேடயமும் வழங்கினார்.
- சின்னேரிபாளையம் சிறந்த ஊராட்சியாக தேர்வு பெற்றமைக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த கிராம ஊராட்சியாக அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னேரிபாளையம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.
அதற்காக மாவட்ட கலெக்டர் வினீத், ஊராட்சி தலைவர் சரவணனிடம் ரூ.7½ லட்சம் மற்றும் பரிசுக்கேடயமும் வழங்கினார். அப்போது ஊராட்சி செயலாளர் ரங்கசாமி உடனிருந்தார்.சின்னேரிபாளையம் சிறந்த ஊராட்சியாக தேர்வு பெற்றமைக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.