உள்ளூர் செய்திகள்
காங்கயம் அரசு கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்
- தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்.
- பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காங்கயம்:
காங்கயம் அரசு கல்லுாரி முதல்வர் நசீம்ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காங்கயம் அரசு கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியில், வணிகவியல், வணிக நிர்வாகவியல், பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 1ந் தேதிக்குள் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.