வீடு வீடாக தேசிய கொடி ஏற்ற விழிப்புணர்வு
- தேசிய கொடியை எடுத்துக்கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
உயர்கல்வி துறை அறிவுறுத்தலின் படி 75வது சுதந்திர தினத்தை (பவள விழா) முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக வீடுவீடாக சென்று பவளத் தினத்தை பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் குடிசைப் பகுதியில் வீடுவீடாக சென்று வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை கம்பீரமாக பறக்க விடுவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும் கொடி காத்த திருப்பூர் குமரனின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடியும், தேசிய கொடியை எடுத்துக்கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார் ஆகியோர் தலைமையில் 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.