- நல்லதம்பி எம்எல்ஏ வழங்கினார்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூ:
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி ஊராட்சியில் உஜ்வலா திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் மற்றும் அடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி கொரட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
ஊராட்சி செயலாளர் ரமேஷ் வரவேற்றார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, துரை, முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஏ.நல்லதம்பி எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச கியாஸ் மற்றும் அடுப்புகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமுருகன், துணை தலைவர் மோகன்குமார், மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, மின்சார வாரிய செயற்பொறியாளர் அருள் பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆறுமுகம் நன்றி கூறினார்.