உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து இளம்பெண்ணை அடித்து உதைத்த வாலிபர்

Published On 2022-08-15 09:35 GMT   |   Update On 2022-08-15 09:35 GMT
  • 5 மாதங்களுக்கு முன்பு செட்டிபாளையத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை வேலை செய்து வந்தார்.
  • இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னை திருமணம் செய்யுமாறு தகராறில் ஈடுபட்டார்.

கோவை

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செட்டிபாளையத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை வேலை செய்து வந்தார்.

அப்போது அங்கு வேலைபார்த்த அப்துல் பாசித் (27) என்பவர் அந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்யுமாறு அந்த வாலிபர் அடிக்கடி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அவரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம்பெண் அந்த வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இதனால் கோபத்தில் இருந்த அப்துல் பாசித் சம்பவத்தன்று ரத்தினபுரியில் உள்ள அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அப்போது மீண்டும் தன்னை திருமணம் செய்யுமாறு இளம்பெண்ணிடம் அவர் தகராறில் ஈடுபட்டார்.

அதற்கு அவர் மறுத்ததார். இதில் ஆத்திரமடைந்த அப்துல் பாசித் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் முன்னிலையில் அவரை அடித்து உதைத்தார். தங்கள் கண் முன்னாள் மகள் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்துல் பாசித்தை கண்டித்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்தனர்.

அவர்களையும் மிரட்டி விட்டு அப்துல் பாசித் அங்கிருந்து சென்றார். இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த இளம்பெண்ணை செல்போனில் அழைத்து அப்துல்பாசித் தன்னை திருமணம் செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அந்த வாலிபரின் தொல்லை தாங்காமல் இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News