உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் காட்டெருமை தாக்கி பெண் மரணம்

Published On 2022-08-19 11:17 GMT   |   Update On 2022-08-19 11:17 GMT
  • நடுவூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென ரோட்டின் குறுக்காக வந்த காட்டு எருமை தேவியை முட்டி கீழே தள்ளியது.
  • தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்தார்.

ஏற்காடு:

ஏற்காடு பட்டிபாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேவி (வயது 37).

இவர் நேற்று ஏற்காடு டவுன் பகுதிக்கு வந்து விட்டு தனது ஊரான பட்டி பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். நடுவூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென ரோட்டின் குறுக்காக வந்த காட்டு எருமை தேவியை முட்டி கீழே தள்ளியது.

இதில் தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் வந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் தேவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News