உள்ளூர் செய்திகள்

நேரம் வரும்போது எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைந்து விடுவார்- டி.டி.வி.தினகரன்

Published On 2022-10-02 05:45 GMT   |   Update On 2022-10-02 05:45 GMT
  • 2024-ல் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்பது எனது யூகம். இருந்தாலும் உறுதியாக கூற முடியாது.
  • கடந்த 1991-ம் ஆண்டு நடந்த தேர்தல் போல் அரசியலில் எது வேண்டுமானாலும நடக்கலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. கோர்ட் உத்தரவிட்டதால் நான் அதை பற்றி எதுவும் கூற முடியாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இன்று அதன் பேரணிக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.

2024-ல் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்பது எனது யூகம். இருந்தாலும் உறுதியாக கூற முடியாது. கடந்த 1991-ம் ஆண்டு நடந்த தேர்தல் போல் அரசியலில் எது வேண்டுமானாலும நடக்கலாம்.

அரசு டவுன் பஸ்சில் பெண்களின் இலவச பயணத்தை பற்றி அமைச்சர் ஒருவர் இழிவாக பேசியது தி.மு.க.வின் குணாதிசயத்தை காட்டுகிறது. தி.மு.க. என்னும் தீய சக்தியை வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சாத்தூர் ராமசந்திரன் தலித் ஒருவரை நிற்க வைத்து பேசியது ஏன் என்று தெரியவில்லை.

அ.ம.மு.க. கடந்த 5 ஆண்டுகளாக தனித்து சுதந்திரமாக செயல்படும் ஒரு இயக்கம்.

ஓ.பன்னீர்செல்வம் கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக தான் உள்ளது. நான், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் நேரம் வரும் போது ஒன்றிணைவதில் தவறு இல்லையே? ஏன் எடப்பாடி பழனிசாமி கூட நேரம் வரும்போது எங்களிடம் இணையலாம்.

சசிகலா சிறையில் இருக்கும் போது அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அவரை பார்க்க சென்றோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு ஒரு லோக் ஆயுத்தா பிரச்சினை இருக்கிறது. நான் வந்தால் என்னை சிறையில் போட்டு விடுவார்கள் என கூறினார். அவர் வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயந்து விடுவார். நீங்கள் தவறான ஆளை முதலமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளீர்கள் என சசிகலாவிடம் ஏற்கனவே நான் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News