உள்ளூர் செய்திகள்

மேலூர் அருகே பட்டாசு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது- டிரைவர் பலி

Published On 2022-10-05 11:04 GMT   |   Update On 2022-10-05 11:04 GMT
  • சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றி கொண்டு ஒரு லாரி திருச்சி சென்று கொண்டிருந்தது.
  • லாரி டிரைவர் புளியங்குடியைச் சேர்ந்த திருமலை குமார் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலூர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றி கொண்டு ஒரு லாரி திருச்சி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி பாலம் அருகே 4 வழிச்சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கியது.

பட்டாசு லாரி முன்னால் சென்ற வாகனத்தின் மீதோ அல்லது சென்டர் மீடியினின் பக்கவாட்டிலோ மோதியதா? என்று தெரியவில்லை. இதில் லாரியின் முன்புறம் நொறுங்கியது. லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடியைச் சேர்ந்த திருமலை குமார் (42) படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன், ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News