உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் கிடந்த பொம்மை துப்பாக்கியால் பரபரப்பு

Published On 2022-08-09 07:12 GMT   |   Update On 2022-08-09 07:12 GMT
  • கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் குப்பை தொட்டி உள்ளது.
  • குப்பை தொட்டியில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் குப்பை தொட்டி உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்களான ராணி, நாகம்மாள் இருவரும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதில் ஒரு கை துப்பாக்கி கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அந்த துப்பாக்கியை கைப்பற்றி புதுப்பேட்டையில் உள்ள ஆயுத கிடங்கிற்கு அனுப்பி சோதனை செய்தனர்.

அப்போது அது ஒரு பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News