உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு

Published On 2022-08-12 11:46 GMT   |   Update On 2022-08-12 11:46 GMT
  • மறைமலைநகர் வள்ளல் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் ராஜா.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வள்ளல் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 31), இவர் வள்ளல் சீதக்காதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ராஜாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2,700- ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து 3 பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து ராஜா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News