உள்ளூர் செய்திகள்

கோயம்பேட்டில் பஸ்சில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபோது கண்டக்டரின் பையில் இருந்த ரூ.13 ஆயிரத்தை நூதனமாக திருடிய மர்ம நபர்

Published On 2022-08-15 07:48 GMT   |   Update On 2022-08-15 07:48 GMT
  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக பஸ்புறப்பட தயாரானது.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு பஸ்புறப்பட தயாரானது. தொடர் விடுமுறை காரணமாக பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கண்டக்டர் கலியபெருமாள் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு நெரிசலில் நுழைந்து சென்று டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.அப்போது பயணி ஒருவருக்கு சில்லரை கொடுப்பதற்காக தனது பையை பார்த்தபோது அதில் இருந்த பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பயணிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் கண்டக்டரின் பையில் இருந்த ரூ.13 ஆயிரத்தை நூதனமாக திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கண்டக்டர் கலியபெருமாள் பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News