உள்ளூர் செய்திகள்
கோடம்பாக்கத்தில் கடையை உடைத்து செல்போன்கள் கொள்ளை
- கோடம்பாக்கம் பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ்.
- கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போரூர்:
கோடம்பாக்கம் பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ் (வயது25) அதே பகுதி ரங்கராஜபுரத்தில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த செல்போன்கள் உட்பட 35 செல்போன்களை கொள்ளையர்கள் சுருட்டி சென்றது தெரியவந்தது.