உள்ளூர் செய்திகள்

திராவிட மாடல் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லை- ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Published On 2022-09-27 08:17 GMT   |   Update On 2022-09-27 08:17 GMT
  • அ.தி.மு.க.வில் பன்னீர் செல்வத்திற்கு பதவியே இல்லை.
  • தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான மனு தாக்கலில் 700 பேர் கூட வரவில்லை.

சென்னை:

சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவியும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் டி.ஜெயக்குமார் கூறியதாவது :-

அ.தி.மு.க. சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினோம்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை யார் வீட்டுக்கு சென்று இருக்க வேண்டும். அனைத்தும் பன்னீர்செல்வம் வீட்டில் தான் இருந்தது என்று ஜே.சி.டி.பிரபாகர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறார். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு டம்மி பீஸாக உள்ள கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி வீட்டில் ஆவணங்களை கைப்பற்றுகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. கைகோர்த்து உள்ளனர்.

அ.தி.மு.க.வில் பன்னீர் செல்வத்திற்கு பதவியே இல்லை.

தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான மனு தாக்கலில் 700 பேர் கூட வரவில்லை. அதில் எத்தனை பேர் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் என்ற பட்டியலை சமூக நீதிப் பேசுபவர்கள் வெளியிட வேண்டும். ஜாதி ஆதிக்கம் அதிகம் மேல் ஓங்குவது தி.மு.க.வில் தான்.

கேள்வி :-எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலை அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளதே ?

பதில் :-தலைவர்களின் சிலைக்கு உடனடியாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தி.மு.க. செய்து இருக்க வேண்டும். ஆனால் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் இவர்கள், சமூக நீதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது.

‌இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

Similar News