உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி
- ராமேஸ்வரம் சங்குமால் பகுதியை சேர்ந்தவர் பாபுதாசன்.
- கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
ராமேஸ்வரம் சங்குமால் பகுதியை சேர்ந்தவர் பாபுதாசன் ( வயது 54). இவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து மீன் பிடித்து வந்தார்.
இன்று காலை பாபுதாசன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 14 பேர் தருவைகுளத்தில் இருந்து ஒரு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தருவை குளத்தில் இருந்து சுமார் 6 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென பாபுதாசன் படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.