உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-06-25 07:21 GMT   |   Update On 2022-06-25 07:21 GMT
  • தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளில் ஒரு சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது.
  • இதைத்தொடர்ந்து அங்கு பயிலும் 200 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளில் ஒரு சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அங்கு பயிலும் 200 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருந்ததால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே ஒரு சில வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News