உள்ளூர் செய்திகள்
பெசன்ட் நகர் பீச்சில் ஃப்ரெண்ட்ஸ் குருப் நடத்திய சுதந்திர தின விழா
- இந்தியா 75 ஆண்டு நிறைவு பெற்றதை சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
- பெசன்ட் நகர் பீச்சில் ஃப்ரெண்ட்ஸ் குருப் சார்பாக தேசிய கொடி ஏற்றி மரியாதை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெற்றதை சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர். இதுதவிர, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
அந்த வகையில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குருப் சார்பில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது இவ்விழாவில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குருப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.