உள்ளூர் செய்திகள்

ஆவடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-08-09 08:44 GMT   |   Update On 2022-08-09 08:44 GMT
  • சரக்கு வேனில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
  • பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருந்த 44 மூட்டைகளில் இருந்த 1100 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அம்பத்தூர்:

ஆவடி அருகே உள்ள கரளபாக்கம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நந்தீஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருந்த 44 மூட்டைகளில் இருந்த 1100 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜா என்பவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News