உள்ளூர் செய்திகள்

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

Published On 2023-05-12 12:38 IST   |   Update On 2023-05-12 12:38:00 IST
  • நாளை நடைபெறுகிறது
  • திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவிக்கலாம்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு மே மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை 13 ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள். உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், அலைபேசி எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்ப த்தலைவரின் புகைப்படம் மாற்றி பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும்.

இது தவிர பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

மேலும் ரேஷன் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகள் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு கொடுத்து பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News