உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் தீ விபத்து
- தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே ஈராளம்சேரி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தாட்சாயினி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கம்பெனி இயங்கிவருகிறது.
இதில் 50-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை செய்துவருகின்றனர். நேற்று மாலை கம் பெனி வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு களில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அரக்கோ ணம், ராணிப்பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை வரவ ழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத் துக்கான காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.